கரூர் சிபிஐ அதிகாரிகள் தங்கி உள்ள சுற்றுலா மாளிகையில்,  கரூர் மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் ஐந்து பேர் சிபிஐ முன் ஆஜராகினர். கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி,, தமிழக வெற்றி கழக ...

சிபிஐ விசாரணை கண்காணிப்பு குழுவினரிடம் புகார் மனு அளிக்க வந்த பாதிக்கப்பட்ட பொதுமக்களை,  இரண்டாவது நாளாக 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வைத்ததால் கோபமடைந்தவர்கள், சிபிஐ அதிகாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்,  விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய்ரஸ்தோகி, மற்றும் ...

கோவை பாரதியார் பல்கலைக் கழக விதிமுறைகள் மீறிய, முன்னாள் பொறுப்பு பதிவாளர் ரூபா குணசீலனை,பணியிடை நீக்கம் செய்து, பதிவாளர் ராஜவேலு நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்தார். கோயம்புத்தூர் மருதமலை பகுதியில் பாரதியார் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 39 துறைகளில் முனைவர் பட்டம் உள்பட 54 முதுகலை படிப்புகள் உள்ளன. இந்த பல்கலைக் கழகத்தின் ...

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை, தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் பலருக்கு சரிவர படிவம் கிடைக்கவில்லை, படிவத்தை நிரப்ப தெரியவில்லை, சிறப்பு முகாம்களிலும் தீர்வு கிடைக்கவில்லை என பலரும் திண்டாடி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பது குறித்து, நீங்கள் இந்த ...

பெறுநர், பொது மேலாளர் (தென்னக ரயில்வே), சென்னை. கோட்ட ரயில்வே மேலாளர் (DRM), தென்னக ரயில்வே, சேலம் கோட்டம் மற்றும் பாலக்காடு கோட்டம். மதிப்பிற்குரிய ஐயா/அம்மையீர், பொருள்: மதுரை, தூத்துக்குடி/ராமேஸ்வரம் செல்லும் முக்கிய ரயில் சேவைகளை மீட்டெடுத்தல் மற்றும் கோயம்புத்தூர் பிராந்திய உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கை மனு. ...

தொடர்ந்து பெய்த கனமழையால், ஆயிரக்கணக்கான  ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா , தாளடி. நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்தன. வேர்கள் முழுவதும் அழுக தொடங்கியதால் விவசாயிகள் வேதனை  அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி நெல் பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு  வந்தனர். ...

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பெண் தொழில் முனைவோர்களுக்கான முக்கிய துறையாக ஒப்பனை கலைஞர்களின் அழகியல் துறை மாறி வருகிறது. இந்நிலையில் தனியார் மையத்தில் பயிற்சி முடித்த ஒப்பனை கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, கோவை சாய்பாபா காலனி பகுதியில் நடைபெற்றது.இதில் பயிற்சி முடித்த பெண்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக, திருமண கோலத்தில் மணமகளுக்கு ...

அரசு இலவசமாக வழங்கிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்த குஜிலியம்பாறை காவல்துறை உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அரை நிர்வாணத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த நபர்களால் பரபரப்பு. திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நந்தவனப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கென்னடி. இவர் தனது உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மேல் ...

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள கீழ முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார்.இவர் தனது தந்தையின் சொத்தில் அண்ணன் பெருமாளிடம் பங்கு கேட்டு தராததால் சொத்தில் பங்கு தராத அண்ணனை கடந்த 2024 ஆம் ஆண்டு மண்வெட்டியால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.கொலை சம்பந்தமாக வருசநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை தேனி ...

திருப்பத்தூரில் தூய நெஞ்சக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு அகில இந்திய கபாடி போட்டி. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டின் பவள விழாவை முன்னிட்டு ,டிசம்பர் 25 முதல் 28ஆம் தேதி வரை அகில இந்திய அளவிலான கபாடி போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ...