கோவிலில் பூட்டை உடைத்து திருட முயற்சி.

கோவை ஜூன் 4 கோவை காட்டூர் அனுப்பர்பாளையத்தில் அருள்மிகு பிள்ளையார் மாரியம்மன் கோவில் உள்ளது .நேற்று யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் முன் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த நிர்வாக அதிகாரியின் அலுவலகத்தில் திருட முயற்சி செய்துள்ளனர். இதை அறிந்த கோவில் ஊழியர் ஜெயஸ்ரீ, நிர்வாக அதிகாரி குமுதவல்லிக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து காட்டூர் போலீசில்புகார்செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடி .கேமராக்களை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.