போக்சோ வழக்கில் கைதானவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை.!!

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி, அவ்வை நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 44) சலவை தொழிலாளி. இவர் 10 – 8 – 22ம்ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வாரத்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம்.  இது குறித்து அந்த சிறுமியின் தந்தை செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர். இவர் மீது கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட ரவிக்குமாருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ 7ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்..