தண்டவாளத்தில் கல் வைத்தால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது. கோவை ரயில்வே போலீசார் கடும் எச்சரிக்கை.

கோவை ஜூன் 11 கோவையில் கடந்த 5 மாதத்தில் ரயில் தண்டவாளத்தில் கல் வைத்ததாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவே தண்டவாளத்தில் கல் வைத்தால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோவை ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- கோவை ரயில் நிலையத்துக்கு தினமும் 70 க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இதனால் தினமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் தண்டவாளம் செல்வதால் இளைஞர்கள், சிறுவர்கள் பலர் தண்டவளம் அருக விளையாடி வருகிறார்கள். அப்போது விளையாட்டுத்தனமாக தண்டவாளத்தில் கல் வைப்பது, சிக்னலை உடைத்து சேதப்படுத்துவது ஓடும் ரயில் மீது கல் எறிவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் .இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.. குறிப்பாக இரவு நேரத்தில் இளைஞர்கள் தண்டவாளம் அருகே அமர்ந்து மது அருந்தும் போது குடி போதையில் தண்டவாளத்தில் கற்களை வைத்து விடுகிறார்கள். இது குற்றச் செயலாகும். இது போன்ற விளையாட்டுத்தனமாக கூட யாரும் செய்யக்கூடாது. கோவையில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை தண்டவாளத்தில் கற்கள் வைத்ததாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தண்டவாதத்தில் கற்கள் வைக்கும் போது ரயில் தடம் புரண்டு விட்டால் அதில் பயணிக்கும் பயணிகளுக்கு தான் பாதிப்பு ஏற்படும். எனவே தண்டவாளத்தில் கற்கள் வைப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதுகுண்டர் தடுப்புச் சட்டம் பாயும். இவ்வாறு அவர்கள் கூறினார்..