கோவை மாவட்டத்தில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று மதியம் விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஜெயிலர் 2 படத்திற்கான படப்பிடிப்புக்கு வந்துள்ளேன். திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஒட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு |நோ கமெண்ட்ஸ்”என்று கூறிவிட்டு சென்றார். இதையொட்டி விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கோவையில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி..!
