பேக்கரியில் திருடிய வாலிபர் கைது.

கோவை மே 31 கோவைஅருகே உள்ள வெள்ளலூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் வீரமணி ( வயது 31) இவர் அங்குள்ள புற்றுக்கண் மாரியம்மன் கோவில் அருகே பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று அவரது பேக்கரிக்கு வந்த ஒருவர் அங்கிருந்த ஸ்நாக்ஸ்களை திருட முயன்றார். அவரை வீரமணி கையும் களவுமாக பிடித்துபோத்தனூர்போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் இராமநாதபுரம், திருவள்ளூர் நகரை சேர்ந்த விஷ்வராஜ் ( வயது 19) என்பது தெரிய வந்தது.இவரிடம்விசாரணை நடந்து வருகிறது.