மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த வாலிபரை தாக்கி ஸ்கூட்டர் பறிப்பு..!

கோவை சிங்காநல்லூர் கள்ளிமடையைச் சேர்ந்தவர் பாபு எட்வர்ட் விக்டர். இவரது மகன் பிளக்ஸ் மேத்யூ (வயது 22) இவர் நேற்று முன்தினம் இரவில் சுங்கம் பைபாஸ் ரோடு பாரி நகர் பகுதியில் தனது நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர் .இவர் இல்லை என்றார். இதனால் ஆத்திரமடைந்த இரு ஆசாமிகளும் பெலிக்ஸ் மேத்யூ மற்றும் அவரது நண்பரை தாக்கினார்கள். பிறகு அவரிடம் இருந்த ஸ்கூட்டரை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து இராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது .சப் இன்ஸ்பெக்டர் ராமர் வழக்கு பதிவு செய்து சுங்கம் பைபாஸ் ரோடு மதுரை வீரன் திட்டு பகுதியை சேர்ந்த சங்கர் என்ற ஹரிசங்கர் ( வயது 28) ரத்தினபுரி பி .எம் . சாமி காலனி கௌதம் ( வயது 22 ) ஆகியோரை கைது செய்தார். ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..