காதல் தோல்வியால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை .

கோவை ஜூன் 14 பொள்ளாச்சி பக்கம் உள்ள குள்ளக்காபாளையம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் தாமோதரன் (வயது 34) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.குடிப்பழக்கம் உடையவர். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம்.இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதால் அவரது காதலி இவரை விட்டு பிரிந்து விட்டார்.இதனால் மனம் உடைந்த தாமோதரன் மதுவில் சாணி பவுடரை கரைத்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து அவரது தந்தை சதாசிவம் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சந்திரலேகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.