கோவை மே 30 பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அணில் குமார் மகட்டோ . இவரது மனைவி கஜால் தேவி (வயது) 31 இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகனும் உள்ளனர்.இவர்கள் நெகமம் பக்கம் காட்டம்பட்டியில் உள்ள கயிறு தொழிற்சாலை குடியிருப்பு தங்கி இருந்து வேலை பார்த்து வந்தனர்..இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 23ஆம் தேதிகஜல் தேவிதனது மகள் நிதி குமாரி ( வயது 11) மகன் அஜித்குமார் (வயது 10 )ஆகியோருடன் எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து கணவர்அனில் குமார் மகட்டோ நெகமம் போலீசில் புகார் செய்துள்ளார்.. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
2 குழந்தைகளுடன் வட மாநில பெண் திடீர் மாயம் .
