பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே 6கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது .

கோவை ஜூன் 14 பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா பிரியா நேற்றுஇரவு ரோந்து சுற்றி வந்தார்.அப்போது பொள்ளாச்சி ரயில் நிலையம் முன் சந்தேகப்படும்படிகையில் பெரிய பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இதை யடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் போடிநாயக்கனூர் பக்கம் உள்ள குப்பி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தமுருகதாஸ் மகன் திவாகர் (வயது 32) என்பது தெரியவந்தது இவர் இந்த கஞ்சாவை ரயிலில் கடத்திவந்ததாக கூறப்படுகிறது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.