டாஸ்மாக் கடையில் கள்ள மார்க்கெட்டில் மது விற்றவர் கைது.

கோவை மே

21கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்,சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ்ஆகியோர் நேற்று சங்கனூர் ரோடு கண்ணப்ப நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைபகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.அப்போது காலை 7:30 மணி அளவில் டாஸ்மாக் கடை அருகேமறைந்து நின்று கொண்டு கள்ள சந்தையில் ஒருவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் அவர் கோவை புதூர்,ராமசாமி நகரை சேர்ந்த குமார் ( வயது 50) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 110மது பாட்டில்களும ரூ5 ஆயிரத்து 300பணமும் பறிமுதல் செய்யப்பட்டது..குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.