கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடி கைது.

கோவை ஜூன் 10 கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் நாகேந்திரன் ( வயது 39 )தனியார் நிறுவன ஊழியர். இவர் கணபதி டெக்ஸ்டூல் பாலம் அடியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி நாகேந்திரனை கத்தியைகாட்டி மிரட்டி சட்டைப் பையில் இருந்த பணத்தை பறித்துவிட்டு, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றுவிட்டான். இதுகுறித்த புகாரின் பேரில்ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தினர், இதில் மோசஸ் ( வயது 25)என்பவன் தான் இந்த வழிப்பறியை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து இவனை போலீசார் நேற்று கைது செய்தனர்.இவன் பிரபல ரவுடி ஆவான்.. இவன் மீது பல வழக்குகள் உள்ளன.இவன் கோவை நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது இதை மீறி நுழைந்துள்ளது தெரிய வந்தது.இவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.