காதல் திருமணம் செய்த புதுப்பெண் திடீர் மாயம்.

கோவை ஜூன் 20 கோவை மாவட்டம் காரமடை, நேரு நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 40) அங்குள்ள தனியார் மருத்துவமனை குடியிருப்பில் வசித்து வருகிறார். ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காயத்ரி ( வயது 20) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.இவர் காதல் திருமணம் செய்தது காயத்ரியின் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை.இந்த நிலையில் நேற்று காயத்ரி திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது கணவர் வினோத்குமார் காரமடை போலீசில் புகார் செய்துள்ளார் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்