கோவை மே 30 கோவை கரும்பு கடை, சாரமேடு பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன் ( வயது 43) அந்த பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று மதியம் கடையில் இருந்த போது டிப்- டாப் உடை அணிந்த வாலிபர் ஒருவர் கடைக்கு சென்றார் .அவர் அந்த கடையில் சில பொருட்கள் வாங்கினார் பின்னர் அவர் பெட்ரோல் பங்கில் 1ரூபாய் 2 ரூபாய் ,5 ரூபாய் மற்றும் 10ரூபாய் நாணயங்கள் அதிகம் உள்ளன .அதை உங்களிடம் கொடுத்தால் நீங்கள் ரூபாய் நோட்டுகளாக தருவீர்களா? என்று கேட்டுள்ளார் .அதற்கு சம்சுதீன் சம்மதித்தார் உடனே அந்த வாலிபர் தன்னிடம் ரூ. 22, ஆயிர த்துக்கு சில்லரை நாணயங்கள் உள்ளன. நீங்கள் கடை ஊழியரை என்னுடன் அனுப்பினால் சில்லறை நாணயங்களை அவரிடம் கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பி சம்சுதீன் அந்த வாலிபரிடம் ரூ 22 ஆயிரத்தை கொடுத்து கடை ஊழியரை அவருடன் அனுப்பி வைத்தார். அந்த வாலிபர் கடை ஊழியரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கரும்புக்கடை ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்றார்.அவர் கடை ஊழியரிடம் நீங்கள் இங்கே நில்லுங்கள். நான் சில்லறை நாணயங்கள் எடுத்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை .இதனால் சந்தேகமடைந்த அந்த கடைஊழியர் சம்சுதீனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கூறினார். உடனே அவர் சென்று அந்த பெட்ரோல் பங்கில் விசாரித்த போது நாங்கள் யாருக்கும் சில்லறை நாணயங்கள் கொடுப்பது இல்லை என்று கூறினார்கள். அப்போதுதான் அந்த வாலிபர் ரூ.22 ஆயிரத்தை மோசடி செய்தது சம்சுதினுக்கு தெரிய வந்தது .இது குறித்து கரும்புக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி செய்த அந்த ஆசாமியை தேடி வருகிறார்கள்.
சில்லறை நாணயங்கள் தருவதாக கூறி வியாபாரியிடம் ரூ.22 ஆயிரம் மோசடி.
