நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் நடைபெற்றது.

உதகை ஜூன் 23 நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், விவசாயிகள்
குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் நீலகிரி பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளின் விவசாய சங்கங்களிடமிருந்து முன்னதாகவே பெறப்பட்ட 35 கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அந்த மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பதில்களாக
விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது, இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :-நீலகிரி மாவட்டத்தில், கால்நடைதுறையின் சார்பாக வரும் மாதங்களில்
சைலேஜ் தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண்மை அறிவியல்
நிலையம் மூலம் விவசாயிகள் பயனடையும் வகையில் பருவ நிலைக்கான கால
நிலை முன் அறிவிப்பு குறித்து விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்,நடைபெற்ற விவசாயகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,
நீலகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், ஒரு நடமாடும்
கால்நடை மருந்தக வாகனம் மட்டுமே இருந்த நிலையில், தற்போது மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்களின் முயற்சியினால் மூன்று நடமாடும் கால்நடை
மருந்தக வாகனம் இயங்கி வருகிறது. இதற்காக விவசாயிகள் சார்பாக நன்றி
தெரிவிக்கப்பட்டது,பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தோட்டக்கலைத்துறையில்
துணை தோட்டக்கலை அலுவலராக பணிபுரியும் என்.சந்திரன் அவர்களுக்குஒரு ஆண்டு அங்கக வேளாண்மை பயிற்சி முடித்தமைக்கான சான்றினை வழங்கினார்,இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன்,தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலாமேரி, ஆவின் பொது மேலாளர் மரு.ஜெயராமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், துணை இயக்குநர் முதுமலை புலிகள் காப்பகம்(மசினகுடி வனக்கோட்டம்) அருண்குமார், நீலகிரி மாவட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த விவசாயிகள் மற்றும் சங்க தலைவர்கள் உறுப்பினர்கள் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.