கோவை ஜூன் 12கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் 25 வயது பெயிண்டருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது .அவர்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இது அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அந்த சிறுமி 10-ம் வகுப்பு படித்து வந்ததால் பள்ளிக்குச் செல்லபெற்றோர்கள் தடை விதித்தனர். இருந்த காதல்போதையில் இருக்கு வந்த சிறுமி அந்த பெயிண்டரை காதலிப்பதில் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் அந்த சிறுமி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அந்த சிறுமியும் பெயிண்டரும் கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது சிறுமிக்கு 16 வயது தான் இருக்கும். எனவே இந்த திருமணத்தை சிறுமியின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து அந்த சிறுமியும் பெயிண்டரும் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தனர். தற்போது அந்த சிறுமி 8 மாத கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் சிறுமி கோவை அருகே உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போதுதான் அந்த சிறுமிக்கு திருமணமானதும் அவர் 8மாத கர்ப்பமாக இருப்பதும் டாக்டர்களுக்கு தெரியவந்தது. இது குறித்து குழந்தைகள் நல உதவி மையத்துக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர் .இதை தொடர்ந்து குழந்தைகள் உதவி மையத்தினர் கோவை மாநகர மத்திய பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் 25 வயதான பெயிண்டர் அந்த சிறுமியை ஆசை வார்த்தை காட்டி திருமணம் செய்தது தெரியவந்தது .இதை யடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெயிண்டரை காவல் நிலையத்தில் ஆஜராக அவருக்கு சமன் அனுப்பப்பட்டுள்ளது.
17 வயது சிறுமியை திருமணம் முடித்து கர்ப்பமாகிய காதலன் மீது போக் சோவில் வழக்கு.
