10 – ம்வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் கைது.

கோவை மே 31  மதுரை மாவட்டம் அனணக்கார பட்டியைச் சேர்ந்தவர் 18 வயது சிறுவன். கட்டிட வேலைக்காக கோவைக்கு வந்தார். அவருக்கு கோவை கருமத்தம்பட்டி பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயதுமாணவியிடம் பழக்கம் ஏற்பட்டது. அதை பயன்படுத்திக் கொண்ட சிறுவன் அந்த மாணவிக்கு ஆசை வார்த்தை காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் .இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர்.