கோவை ஜூன் 6 கோவை ராமநாதபுரம் புலியகுளம், கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்தவர் காவியா ( வயது 34 )இவரது 15வயது மகன் தனதுநண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட வெளியே சென்று இருந்தான். பின்னர் புலியகுளம் ரெட் பீல்டு ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு தண்ணீர் குடிக்க சென்றான்..அப்போது அங்கு மாணிக்கம் என்பவரது மகன் திருமணம் நடந்து கொண்டிருந்தது. திருமண மண்டபத்துக்குள் வந்த சிறுவனை மாணிக்கம் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி தாக்கினார். இதில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. . சிகிச்சைக்காக அரசு மருத்துவமணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்துசிறுவனின் தாயார் காவியா ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் மாணிக்கம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமண மண்டபத்தில் சிறுவனுக்கு அடி – உதை .
