சட்ட விரோதமாக குடியேறிய 54 இந்​தி​ய இளைஞர்கள் நாடு கடத்தல்.!!

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மான வழி​யில் நுழைந்த ஹரி​யா​னாவைச் சேர்ந்த 54 இளைஞர்​களை அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் இந்​தி​யா​வுக்கு திருப்பி அனுப்பி உள்​ளது.

இதுகுறித்து கர்​னல் மாவட்ட டிஎஸ்பி சந்​தீப் குமார் கூறிய​தாவது: அமெரிக்​கா​வில் உரிய விசா அனு​மதி இல்​லாமல் சட்​ட​விரோத​மான வழி​முறை​யில் குடியேறிய ஹரி​யா​னாவைச் சேர்ந்த 54 இளைஞர்​களை அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் இந்​தி​யா​வுக்கு திருப்பி அனுப்பி உள்​ளது.

இதில் 16 பேர் ஹரி​யா​னா​வின் கர்​னல் மாவட்​டத்தை சேர்ந்​தவர்​கள். கைதாலைச் சேர்ந்த 15 பேர், அம்​பாலா 5, யமுனா நகர் 4, குருஷேத்ரா 4, ஜிந்த் 3, சோனிபட் 2, பஞ்ச்​குலா, பானிபட், ரோத்​தக், பதேஹா​பாத்​தைச் சேர்ந்த தலா ஒரு​வரும் அமெரிக்​கா​விலிருந்து நாடு க​டத்​தப்​பட்​ட​வர்​களில் அடங்​கு​வர்.

டெல்​லி​யின் இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் வந்​திறங்​கிய அந்த 54 பேரும் அவர்​களின் உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டனர். அவர்​களை சட்​ட​விரோத​மான வழி​யில் (டாங்கி ரூட்) அமெரிக்கா​வுக்கு கூட்​டிச் சென்ற முகவர்​கள் யார் என்​பது குறித்து இது​வரை எவரும் புகார் அளிக்​க​வில்​லை.

இந்​தி​யா​வுக்கு நாடு க​டத்​தப்​பட்​ட​வர்​கள் குறித்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. அவர்​கள் யார் மீதாவது குற்​றப்​ப​திவு இருந்​தால் விசா​ரணை​யின்​போது அது வெளிச்​சத்​துக்கு வரும். அப்​போது உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.