இந்திய அளவில் பல மாநிலங்களில் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. அதற்கு அரசே துணை போகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்தியாவில் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் சக்திகள் கொட்டம் விரைவில் அடக்கப்படும். எல்லாரையும் சமமாக பார்க்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் சாதி, மத பிரிவினை பார்க்காமல் எல்லாரையும் சமமாக நடத்தக் கூடிய பண்பை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கொம்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கக்கூடாது என்பார்கள், இப்படி தான் தமிழ்நாடு சமத்துவ பூங்காவாக சகோதரத்துவத்துடன் மாணவர்களாகிய நீங்கள் வளர வேண்டும் . அதனால் தான் அரசியலும், advice உம் பள்ளியில் பேச வேண்டி உள்ளது.
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆராய்ச்சி, பட்டபடிப்பு படித்து முன்னேற வேண்டும். இன்று அறிவியல் வளர்ச்சி அடைந்துவிட்டது நிறைய வாய்ப்புகள் இருக்கிறது, AI புதிய புரட்சியை உருவாக்கி கொண்டிருக்கிறது. அதற்காக ஏன் படிக்க வேண்டும் என்று கருதி விட வேண்டும். எந்த வளர்ச்சியையும் உங்கள் வளர்ச்சிக்காக தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் சிந்தனையை சிதைத்து விடக் கூடாது. உங்கள் ரோல் மாடலை இன்ஸ்டாவில் தேடாதீர்கள். பொழுதுபோக்கு வாழ்க்கையின் ஒரு அங்கம் தான் அதுவே வாழ்க்கை அல்ல. நீங்கள் reels இல் பார்ப்பது எல்லாம் ரியாலிட்டி என்று நம்பி விடாதீர்கள். Likes கெத்து இல்லை marks இல் கெத்து உள்ளது. படிப்பதோடு நன்றாக விளையாடுங்கள்” என தெரிவித்துள்ளார்.