இந்த ரணகளத்திலும் உனக்கு குதூகலம் கேட்குதா… சசி தரூர், பிரியங்கா சதுர்வேதி செய்தியாளர் சந்திப்பில் நகைச்​சுவை பேச்சு.!!

மும்பை: சிவசேனா உத்​தவ் தாக்​கரே அணி​யின் மூத்த தலை​வர் பிரி​யங்கா சதுர்​வே​தி. மாநிலங்​களவை எம்.​பி​.யாக இருக்​கிறார்.

அண்​மை​யில் அவர் செய்தி நிறு​வனத்​துக்கு சிறப்பு பேட்​டியளித்​தார். அப்​போது, எதிர்க்​கட்சி அணி​யில் உள்ள நீங்​கள், பிரதமர் மோடி​யுடன் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்று வரு​கிறீர்​கள். இதன் காரணம் என்ன என்று கேள்வி எழுப்​பப்​பட்​டது.

இதற்கு பதில் அளித்த பிரி​யங்​கா, ‘நான் எங்கு செல்​கிறேன். என் வாழ்க்​கை​யில் என்ன நடக்​கிறது என்​பதை அறிய சிலர் மிகுந்த ஆர்​வ​மாக உள்​ளனர். அவர்​களை வெறுப்​பேற்ற சில விஷ​யங்​களை செய்​கிறேன்’ என்று தெரி​வித்​தார்.

அப்​போது செய்​தி​யாளர் கூறும்​போது, ‘நீங்​கள் சேலை அணிந்த சசி தரூர்’ என்று குறிப்​பிட்​டார். காங்​கிரஸ் மூத்த தலை​வ​ரான சசி தரூர், பிரதமர் நரேந்​திர மோடி​யுடன் நெருக்​க​மாக உள்​ளார். இதை செய்​தி​யாளர் மறை​முக​மாக சுட்​டிக் காட்​டி​னார்.

இதற்கு பதில் அளித்த பிரி​யங்​கா, ‘இது புகழ்ச்​சி​யா, வஞ்ச புகழ்ச்​சியா என்று புரிய​வில்​லை. இதை சசி தரூர் எந்த கண்ணோட்டத்தில் பார்ப்​பார் என்​பதும் தெரிய​வில்​லை. ஆனால் நீங்​கள் கூறிய கருத்தை கண்​டிப்​பாக சசி தரூரிடம் சொல்​வேன்’ என்​றார்.

இதுகுறித்து சசி தரூர் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், ‘பிரி​யங்கா சதுர்​வே​திக்கு நன்​றி. இதை எனக்கு கிடைத்த பாராட்​டாகவே கருதுகிறேன்’ என்று குறிப்​பிட்டு உள்​ளார். அதோடு பிரி​யங்கா சதுர்​வே​தி​யும், பிரதமர் நரேந்​திர மோடி​யும் சந்​தித்து பேசிய வீடியோவை​யும் அவர் தனது சமூக வலைதள பக்​கத்​தில் இணைத்​திருக்​கிறார். இந்த பதிவு வைரலாக பரவி வரு​கிறது.

அரசி​யல் களத்​தில் கார​சா​ர​மான விவாதங்​கள், விமர்​சனங்​கள் அதி​கரித்து வரும் சூழலில் எதிர்க்​கட்​சிகளை சேர்ந்த பிரி​யங்கா சதுர்​வே​தி​யும் சசி தரூரும் நகைச்​சுவையை பரப்பி வரு​கின்​றனர்​.