கலாநிதி மாறன் மீது தம்பி தயாநிதி மாறன் மோசடி குற்றச்சாட்டு

ன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மீது அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் எம்.பி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.தயாநிதி மாறனுக்காக சென்னையைச் சேர்ந்த Law Dharma நிறுவனத்தின் வழக்கறிஞர் கே.சுரேஷ், கலாநிதி மாறனுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:சட்டவிரோத பணப் பரிமாற்றம் போன்ற மோசடியான நடைமுறைகளை கலாநிதி மாறன் கையாண்டார்.2003-ம் ஆண்டு தந்தை முரசொலி மாறன் மறைந்த பிறகு தாயார் மல்லிகா மாறனுக்கு பங்குகள் மாற்றப்பட்டன. இந்த பங்கு பரிமாற்றத்துக்கு இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட எந்த வித சட்டப்பூர்வமான ஆவணங்களும் வழங்கப்படவில்லை. பங்கு பரிமாற்றங்கள் முடிவடைந்த பின்னரே இத்தகைய ஆவணங்கள் இணைக்கப்பட்டன.தம் பெயரில் சன் டிவி நெர்க் குழுமத்தின் பங்குகளை மாற்றுவதற்கான உள்நோக்கத்துடன் திட்டமிட்டு செயல்பட்டார் கலாநிதி மாறன்.2003-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி கலாநிதி மாறன் சன் டிவி நெட் ஒர்க்கின் 12 லட்சம் பங்குகளை ஒருதலைபட்சமாக, தமக்கு ஒதுக்கிக் கொண்டார். அப்போது ஒரு பங்கின் விலை ரூ10 என மதிப்பிடப்பட்டது. இதர பங்குதாரர்களின் ஒப்புதல் இல்லாமலேயே பங்குகளை தமக்கு ஒதுக்கிக் கொண்டார் கலாநிதி மாறன். ஆனால் சந்தையில் அப்போது சன் டிவி நெட்க் ஒர்க் குழுமத்தின் 1 பங்கின் மதிப்பு ரூ 2,500 முதல் ரூ 3,000 வரை இருந்தது. கலாநிதி மாறனின் இந்த நடவடிக்கை மோசடியானது; நம்பிக்கை மோசடி, பங்குதாரரின் உரிமைகளை மீறுதலாகும்.கலாநிதி மாறன் தமக்கு 12 லட்சம் பங்குகளை தாமே ஒதுக்கிக் கொண்ட காலகட்டத்தில் சன் டிவி நெட்க் ஒர்க் குழுமத்தின் நிதி வலுவானதாகவே இருந்தது; புதிய முதலீடுகள் தேவை இல்லாத சூழல் இருந்தது. ஆகையால் கலாநிதி மாறன் 12 லட்சம் பங்குகளை தமக்கு ஒதுக்கிக் கொண்டது மோசடியானது.முறைகேடான நடவடிக்கைகள் மூலம் மியூச்சுவல் பண்ட் மற்றும் சர்வதேச ரியல் எஸ்டேட் நிதியில் ரூ 8,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளன.பங்கு சந்தைகளான BSE, NSE மற்றும் பங்கு சந்தைக்கான நிர்வாக அமைப்பான SEBI ஆகியவற்றில் கலாநிதி மாறன் மோசடியான ஆவணங்களைத் தாக்கல் செய்து ஏமாற்றி இருக்கிறார்.கலாநிதி மாறனின் இந்த மோசடிகள் தொடர்பாக அரசின் Serious Fraud Investigation Office முறையான விசாரணை நடத்த வேண்டும்.2003-ம் ஆண்டு சன் டிவி நெட்ஒர்க் குழுமத்தின் பங்குதாரர் கட்டமைப்பு முறையை மீண்டும் நிலைநாட்ட வேண்டும். அன்றைய நாள் முதல் தற்போது வரை முறைகேடுகள் மூலம் பெறப்பட்ட பண ஆதாயங்கள் மற்றும் சொத்துகளை திருப்பி வழங்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் கலாநிதி மாறன் மீது சிவில், கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் அனுப்பி வைத்த வழக்கறிஞர் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.