கோவை ஜூன் 19 கோவைமாவட்டத்தில் மக்கள் குறைகளை நேரில் கேட்டு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,டாக்டர் .கார்த்திகேயன் தலைமையில் கோவை மாவட்ட காவல் துறைக்கு உட்பட்ட 6காவல் உட்கோட்டங்களிலும் நேற்று சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.. மொத்தம் 679 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.இதில் 518 மனுக்களுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்பட்டன.. 161 மனுக்கள் மேல்நிலை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த சிறப்பு முகாமில் அனைத்து பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட மனுக்களும் பெறப்பட்டன. முகாமில் மாவட்ட இலவச சட்ட ஆலோசனை மையத்தின் வழிகாட்டலுடன் சட்ட ஆலோசகரும், பிற துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். குறிப்பாக .கருமத்தம்பட்டி மற்றும் பேரூர் உட்கோட்டங்களில் மாவட்டகாவல் .கண்காணிப்பாளர் நேரில் சென்று மனுதாரர்களிடம் புகார்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.மேலும், ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு, உரிய தீர்வுகள் வழங்கப்பட்டன. கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் முகாமில் பங்கேற்று, பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.ஒரே நாளில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு முகாம் பொது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
கோவையில் 6 காவல் உட்கோட்டங்களில் மக்கள் குறை தீர்ப்பு முகாம். 518மனுக்களுக்கு உடனடி தீர்வு.
