வீட்டில் விபச்சாரம் பெண்கள் உட்பட 7 பேர் கைது .

கோவை ஜூன் 2 கோவை கோவில்மேடு, மஞ்சேஸ்வரி காலனியில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்துமசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக கவுண்டம்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நல்லாம்பாளையம் மகாலட்சுமி ( 38) மஞ்சேஸ்வரி காலனி சத்யா ( 37 ) மதுக்கரை மரப்பாலம் சிவரஞ்சனி ( 28 ) கோவில்மேடு ரஞ்சித் குமார் (38 ) ரத்தினபுரி கோபிநாத் ( 29 ) ராஜேஷ் ( 20 ) சாய்பாபா காலனி தீபா தர்ஷினி ( 20 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்..இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.