நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆயிரக்கணக்கான மேடை நாடகங்கள், 100 கணககான திரைப்படங்கள் என நடித்தவர். தமிழ் சினிமா ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படுகிறவர்.
சினிமா, அரசியல் ஆகியவற்றில் மட்டுமலல, தன் சொந்த வாழ்க்கையிலும் பல காதல் சர்ச்சைகளைக் கொண்டவர். அவருடைய காதல் லீலைகள் பற்றி தெரிஞ்சிக்கணுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம். அந்த ஐந்து மனைவிகளில் கடைசி மனைவியும் நடிகை ராதிகா மற்றும் நிரோஷாவின் தாய் மரணமடைந்துள்ளார்.
நடிகவேள் எம்.ஆர்.ராதா என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. அவரது ரத்தக்கண்ணீர் பட வசனங்களை இன்றைய தலைறையினரும் ரசித்துப் பார்ப்பதுண்டு. அப்படி தன்னுடைய அசாத்திய நடிப்பால் ரசிகர்களைக் கொள்ளை கொண்ட எம்.ஆர்.ராதா படங்களில் மட்டும் வில்லன் அல்ல.நிஜ வாழ்ககையிலும் ஏகப்படட சர்ச்சைகளில் சிக்கிக கொண்டவர். அதில் அவருடைய சொந்த வாழ்க்கையும் அடங்கும். எம். ஆர். ராதா பிறப்பும் படிப்பும்
எம். ஆர். ராதா 1907 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் நாள் சென்னையில் தான் பிறந்தார்.
அவருடைய தந்தையின் பெயர் மெட்ராஸ் ராஜகோபால நாயுடு. அதுதான் இவருடைய பெயருக்கு முன்னால் இருக்கும் எம். ஆர். என்பது.
ராதாகிருஷ்ணன் என்பது தான் அவருடைய இயற்பெயர். அவருடைய தந்தை ராஜகோபால் ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.
ராதாகிருஷ்ணன் சிறுவனாக இருக்கும்போதே ரஷ்ய எல்லையில் நடந்த போரில் மரணம் அடைந்து விட்டார். அதனால் சிறுவயதிலேயே தந்தையை இழந்து விட்டார் ராதா.
சிறுவயது முதலே படிப்பில் மிகப்பெரிய அளவில் அவருக்கு ஆர்வம் இருந்ததில்லை. தன்னுடைய அண்ணன் மற்றும் தங்கை ஆகியோர் பள்ளிக்குச் சென்றாலும் இவருக்கு பள்ளிக்குச் செல்வதில் விருப்பமே இல்லை..
அதனாலேயே அடிக்கடி தன் தாயிடம் கோபித்துக் கொள்வாராம். அப்படி ஒருமுறை தாயிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போய் ஆலந்தூரில் உள்ள ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்ந்து விட்டார்.
ராதாவுக்கு அரசியல் ஆர்வம் அதிகம். பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். காமராஜருக்கு தனிப்பட்ட முறையில் நண்பரும் கூட.
தன்னுடைய நாடகக் கம்பெனியில் நடித்து வந்த பிரேமாவதி என்னும் பெண்
தன்னைப் போல கருத்தொற்றுமையும் அரசியல் ஈடுபாடும் கொண்டிருந்ததால் அவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. சில காலம் கழித்து மனைவி பிரேமா மற்றும் மகன் தமிழரசன் இருவருமே அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனார்கள். இதற்கு அப்போதைய முதல்வர் அண்ணாதுரை அவர்கள் இரங்கல் செய்தியும் வெளியிட்டு இருந்தார்.
முதல் மனைவி இறந்ததை அடுத்து சில காலங்கள் கழித்து, வெவ்வேறு ஊர்களுக்கு நாடகங்கள் நடிக்கச் செல்லும்போது அங்கங்கு காதல் மலர்ந்து சரஸ்வதி, தனலட்சுமி, ஜெயமமாள் என வரிசையாகத் திருமணம் செய்து கொண்டு, அந்தந்த ஊர்களில் சொத்துக்களும் வாங்கி கொடுத்து குடும்பம் நடத்தி வந்தார்.
இதில் சரஸ்வதி மற்றும் தனலட்சுமி ஆகிய இருவரும் சகோதரிகள். இறுதியில் இலங்கைத் தமிழ் பெண்ணான கீதா என்பவரையும் மணந்து கொண்டார். அவருடைய பிள்ளைகள் தான் நடிகை ராதிகாவும் நிரோஷாவும.
முதல் மனைவி பிரேமாவதிக்கு பிறந்த தமிழரசன் சிறுவயதிலேயே இறந்துவிட, அடுத்து தன்னுடை யமூன்று மனைவிகளின் மூலம் எம்.ஆர்.ராதாவுக்கு மொத்தம் 12 குழந்தைகள்.
எம்ஆர்ஆர் வாசு , எம்ஆர் ராதா ரவி , ராஜு, மோகன். ராதா? ராஷ்யா, ராணி, ரதிகலா, கனவல்லி, கஸ்தூரி, ராஜேஸ்வரி, ராதிகா, நிரோஷா ஆகியோர்.
இதில் ராதிகா, நிரோஷா, ராதாரவி, எம்.ஆர்,ஆர்.வாசு ஆகியோர் சினிமாவில் நடிக்கிறார்கள். மோகன் ராதா தயாரிப்பாளர். மற்றவர்கள் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள.
5 திருமணம் செய்து கொண்ட எம்.ஆர்.ராதா ஐந்தாவது மனைவியைத் திருமணம் செய்வதற்கு முன்பாக, சேலம் மார்டன் தியேட்டர்ஸில் தொடர்ச்சியாக சில ஆண்டுகள் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயம்.
மிகப்பிரபலமான நடிகராக இருந்த சமயத்தில் மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்புகளில் துணை நடிகையான நடித்து வந்த ஞானம் என்கிற நடிகையின் மீது அவருக்கு காதல் ஏற்பட்டதாம். எப்படியாவது அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்து அந்த பெண்ணை வேறு ஊருக்குக் கடத்தியும் சென்று விட்டாராம்.
இதையறிந்த மார்டன் திடீயட்டர்ஸ் உரிமையாளர் மற்றும் சிலர் தேடிப்பிடித்து இந்த பெண்ணை மீட்டிருக்கிறார். அதன்பின் சில காலம் திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு நாடகங்கள்மட்டும் நடித்து வந்திருக்கிறார் என்பது இன்னொரு சுவாரஸ்ய கதை.
ஏராளமான புரட்சி வசனங்கள், அரசியல் மேடைப் பேச்சுக்கள், எம்.ஜி.ஆரை சுட்டது என அவரைச் சுற்றி எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருந்ததே இல்லை.
இப்படி சொந்த வாழ்க்கையிலும் சரி, அரசியல் மற்றும் நடிப்புத் துறையிலும் எப்போதும் பரபரப்பாகவும் சர்ச்சகைளுக்கும் இடையே இருநது வந்த எம்.ஆர்ராதா அவர்கள் 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடுமையாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு இறந்து போனார்.