ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இதனை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சர்வதேச அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த 48 மணி நேரத்திற்குள் ஏப்ரல் 24ம் தேதி ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து இந்தியா ஏவுகணை சோதனை நடத்தியது. அரபிக் கடலில் இருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. இதற்கிடையில் இந்தியா உடனான ஷிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்த பாகிஸ்தான், அந்த ஒப்பந்த விதிகளை மீறி எல்லையில் தாக்க தொடங்கியது.
இதற்கு இந்த ராணுவம் தாக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந் அரபிக்கடலில் நிறுத்தப்பட்டது. ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலில் மிக்-29கே போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் காஷ்மீரின் நிலை குறித்து ஆய்வு செய்ய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ஸ்ரீநகருக்கு விரைந்தார். பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பயங்கரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
இதனால் பாகிஸ்தான் தரப்பு கலக்கம் அடைந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தனது குடும்பத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் பல அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை தனியார் விமானங்களைப் பயன்படுத்தி இங்கிலாந்து மற்றும் நியூ ஜெர்சிக்கு அனுப்பியுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றமான சூழலில் இந்தியா பதிலடியில் இறங்கினால் என்ன நடக்கும் என்பதை உணர்ந்து இவ்வாறு செய்துள்ளனர்.
ஏற்கனவே பொருளாதார சரிவை எதிர்க்கொண்டு, அதிலிருந்து மீள முயற்சி செய்து வருகிறது பாகிஸ்தான். இந்த நிலையில் இந்தியாவுடன் போர் செய்தால் நிலைமை என்னவாகும்? இதனை நினைத்து பார்த்தோ என்னவோ.. பாகிஸ்தானில் இந்தியாவுடன் போர் செய்வதற்கு மக்கள் மட்டுமல்ல, ராணுவத்துக்குள்ளே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் விளைவாக, ராணுவத்துக்குள் கிளர்ச்சி ஏற்பட்டு, ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் (அதிகாரிகள் உட்பட) பதவியில் இருந்து விலகுவதாக, கடிதம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தில் ஏற்பட்டுள்ள, சலசலப்பை முதலில் அந்நாட்டு தலைவர்கள், ராணுவம் சரிசெய்ய வேண்டும். இதை சரி செய்யாமல் யுத்தத்துக்கு புறப்பட்டால், இந்தியா வெல்வது மிக மிக எளிதான காரியமாக மாறிவிடும் என உலக நாடுகள் தெரிவிக்கின்றன.