தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நாய்கள் மனிதர்களை கடிக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரும் இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாய் கடிப்பது மட்டுமின்றி அந்த நாயால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு அபாயமும் ஏற்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 4.80 லட்சம் மக்கள் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 40 பேர் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.கடந்த 6 மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டில் 2.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டில் உயிரிழந்த 40 பேரில் 18 பேர் மட்டும் கடந்த 6 மாதத்தில் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்தனர்.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாய்க்கடியால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமாக சேலம் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டும், தஞ்சாவூரும் உள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் 5 ஆயிரத்து 970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலே நாய்க்கடி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக உள்ள சேலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தடுப்பு நடவடிக்கைகளும் அதிகளவில் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.சேலம் – 19 ஆயிரத்து 250செங்கல்பட்டு – 13 ஆயிரத்து 064தஞ்சாவூர் – 11 ஆயிரத்து 441திருச்சி – 11 ஆயிரத்து 371கன்னியாகுமரி – 10 ஆயிரத்து 580மயிலாடுதுறை – 2 ஆயிரத்து 197நாகப்பட்டினம் – 2 ஆயிரத்து 360சென்னை – 5 ஆயிரத்து 970மதுரை – 6 ஆயிரத்து 633கோவை – 8 ஆயிரத்து 690இதனால், பொதுமக்கள் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் ஆகும். இல்லாவிட்டால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.நாய்களைப் பொறுத்தவரை, அவைகள் பிறந்த முதல் ஆண்டில் ரேபிஸ் தடுப்பூசி 2 முறை செலுத்த வேண்டும். அதன்பின்பு, ஆண்டிற்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்த வேண்டும். இந்த தடுப்பூசியை சில நாய்களுக்கு செலுத்தாத காரணத்தினால் அந்த நாய்கள் கடிப்பதால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படுகிறது.ரேபிஸ் நோய் பாதிப்பு என்பது நாய் கடிப்பதால் மட்டுமே ஏற்படும் பாதிப்பு இல்லை. ரேபிஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நாய் மட்டுமின்றி ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய் மற்றும் வவ்வால் ஆகியவை கடித்தாலும் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உண்டாகும். இதனால், நாய் மட்டுமின்றி எந்த பிராணி கடித்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் ஆகும். இல்லாவிட்டால் பின்னாளில் அது ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்தும்.தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் போதியளவு ரேபிஸ் தடுப்பு மருந்துகள் இருப்பதால் அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் எடுக்கப்பட்டு வருகிறது. நாய்க்கடி பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநகராட்சி சார்பில் நாய்களை பிடித்து அதற்கு தடுப்பூசியும் செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஒரே ஆண்டில் 5 லட்சம் பேருக்கு நாய்க்கடி.. 40 பேர் மரணம் – மக்களே உஷார்!
