சூலூர் பகுதியில் கஞ்சா விற்ற 39 பேர் கைது. எஸ்.பி. கார்த்திகேயன் அதிரடி நடவடிக்கை.

கோவை ஜூன் 24 கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயன், தீவிரமாக செயல்பட்டு வருகிறார் . இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் 3 நாட்கள் “ஆபரேசன் டிரக் ப்ரி கோவை ” என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 927 பேரின் பெயர் பட்டியலானது சேகரிக்கப்பட்டது.இதை யடுத்து நடத்தப்பட்ட அதிரடிசோதனையில் இதுவரை 39 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. மேற்படி பட்டியலில் மீதமுள்ள நபர்களை கண்டறிந்து சோதனை செய்தும் மற்றும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக சூலூர் காவல் நிலைய காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் தலைமையில் சூலூர் போட் ஹவுஸ் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டத்திற்கு விரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த சூலூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் மகன் கோபாலகிருஷ்ணன் (21)என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.