போலி கால் சென்டர் வைத்து 20 கோடி நூதன மோசடி- அமெரிக்கர்களை ஏமாற்றிய 33 பேர் கைது.!!

ந்திர மாநிலம் அனகாப்பள்ளி அச்சுதாபுரத்தில் கால் சென்டர் வைத்து அமெரிக்கர்களை ஏமாற்றி மோசடி செய்த 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம், அச்யுதாபுரத்தில் போலி கால் சென்டர்கள் நடத்தி மாதத்திற்கு ரூ.15 கோடியில் இருந்து ரூ 20 கோடி வரை அமெரிக்க குடிமக்களிடமிருந்து மோசடி செய்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அனகப்பள்ளி மாவட்ட எஸ்.பி. துஹின்சின்ஹா தனிப்படை அமைத்து ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் சோதனை நடத்தி மகாராஷ்டிராவைச் சேர்ந்த புனித் கோஸ்வாமி, ராஜஸ்தானைச் சேர்ந்த அவிஹந்த் தாகா உள்ளிட்ட 33 பேரை கைது செய்தனர். அவர்களில் மூன்று பேர் பெண்கள் ஆவர்.கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரானையில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அமெரிக்கர்களிடம் ஆங்கிலத்தில் பேசவும், தொலைபேசி அழைப்புகளைச் செய்யவும் பயிற்சி அளிக்கப்பட்டு இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைன் வர்த்தகம் மூலம் அமெரிக்கர்கள் பட்டியலை கொண்டு போன் செய்து முதலில் நீங்கள் அங்கு ஆர்டர் செய்தீர்களா என்று கேட்பார்கள். நாங்கள் எந்த ஆர்டரையும் வைக்கவில்லை என்று கூறும்போது, ​​உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டதால், வேறு யாராவது அந்தக் கணக்கைப் பயன்படுத்துகிறார்களா என்று பார்க்க முடியுமா என்று கேட்பார்கள். அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டால், இரண்டாவது கட்டமாக வங்கியில் இருந்து பேசுவதாக அவரது பெயரில் பேசி அனைத்து விவரங்களையும் பெற்று கொள்வார்கள்.

பின்னர் உங்கள் வங்கிக் கணக்கை வேறு யாரோ பயன்படுத்துகிறார்கள் என்றும், உங்கள் பணத்தை கவனமாகக் கையாளுமாறும் எச்சரிப்பார்கள் பின்னர் பணத்திற்கு பாதுகாப்பு என்ற பெயரில் கூப்பன்களை தருவதாக உறுதியளித்து சைபர் மோசடியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இவ்வாறு ஒரு நாளைக்கு 100 முதல் 200 பேரிடம் பேசி மோசடி செய்து வந்துள்ளனர். இதுகுறித்து மேலும் விசாரிக்க மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு, சிஐடி மற்றும் சைபர் நிபுணர்களின் ஒத்துழைப்பைப் பெற்று வருவதாக எஸ்.பி. துஹின்சின்ஹா தெரிவித்தார். இதுபோன்ற மோசடி வெளிநாட்டு குடிமக்களை, குறிப்பாக அமெரிக்க குடிமக்களை குறிவைத்து, சர்வதேச அளவில் இந்தியாவின் இந்தியாவின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரக்கணக்கான டாலர்கள் ஏமாற்றப்பட்டுள்ளன. பிடிப்பட்டவர்களிடம் இருந்து ஏராளமான கணினி அமைப்புகள், நெட்வொர்க்கிங் சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் மேலும் 3 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன என அவர் தெரிவித்தார்.