கோவை ஜூன் 20 கோவை தடாகம் ரோடு, சிவகாமி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 55) டெய்லர். குடிப்பழக்கம் உடையவர் .இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் மின்விசிறியில் மனைவியின் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து மனைவி புவனேஸ்வரி சாய்பாபா காலனி போலீசில் புகார் .சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் இதே போல துடியலூர் பக்கம் உள்ள கே. என். ஜி .புதூர், ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்தவர் சுதர்சன் என்ற சரண் ( வயது 34) இவரும் குடிப்பழக்கம் உடையவர் .எந்த வேலைக்கும் செல்வதில்லை. இந்த நிலையில் விட்டதில்சேலையை கட்டி நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பூவிழி துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார். இதேபோல செல்வபுரம், முத்துசாமி காலனியை சேர்ந்தவர் ராஜா ( வயது 40) திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது .இவரது மனைவியும், குழந்தைகளும் இவரை விட்டு பிரிந்து எர்ணாகுளத்துக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் குடிப்பழத்துக்கு அடிமையான ராஜா நேற்று அவரது வீட்டில் விட்டத்தில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரே நாளில் 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை .
