கோவை ஜூன் 2 கோவைசிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சப் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர்நேற்று ஒண்டிபுதூர், பட்டணம் ரோட்டில் உள்ளநொய்யல் ஆற்று பாலம்அருகே ரோந்து சுற்றி வந்தனர் அப்போது அங்கு சந்தேகப்படும்படி மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களிடமிருந்து கஞ்சா விற்றபணம் ரூ 4,500 கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அந்த பகுதியில் அறை எடுத்து தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா வியாபாரம் செய்வதற்காக நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. 3 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது.
