கஞ்சா – மது விற்பனை செய்த 3பேர் கைது

கோவை மே 31 கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக் குமார், சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று அங்குள்ள கஞ்சி கோணாம்பாளையம். வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா,மேலும் கஞ்சா விற்ற பணம் ரூ. 12,200 , இருசக்கர வாகனம், 2செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த அசோக் (வயது 31) கரும்புக்கடை ,சேரன் நகரை சேர்ந்த அபுதாஹிர் (வயது 35) என்பது தெரியவந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதேபோல கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ,சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ்ஆகியோர்நேற்று சிங்காநல்லூர் வசந்தா மில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 30) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 47 மது பாட்டில்களும், மதுவிற்ற பணம் ரு 16 ஆயிரத்து 400  பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சோதனை நடந்து வருகிறது.