கோவை ஜூன் 11,கோவைமாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நல சங்கங்களின் சார்பில் பணி நிரந்தரம் ,ஊதிய உயர்வு உட்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் .பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட மாநகராட்சி தூய்மை பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வம் என்ற தமிழ்செல்வம்,பன்னீர்செல்வம்,கார்த்திக் ஜோதி சாந்தகுமார் பிலோமினா, ரவி உட்பட 252 பேர் கைது செய்யப்பட்டனர் இவர்களில் 136 பேர் பெண்கள் ஆவார்கள். மாலையில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மறியல் போரில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் 252 பேர் கைது .
