வெளிநாட்டில் உள்ள பெண் அதிகாரி வீட்டில் 23 பவுன் நகை திருட்டு ..!

கோவை பீளமேடு ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள பாரதி காலனி சேர்ந்தவர் குமாரவடிவேல்.இவரது மனைவி பரமேஸ்வரி( வயது 50)இவர்கள் கத்தார் நாட்டில் வசித்து வருகிறார்கள். பரமேஸ்வரி அங்குள்ள நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது சகோதரி மகன் கோவையில் உள்ள அவர்களது. வீட்டை கவனித்து வருகிறார் .ஆண்டுக்கு ஒரு முறை பரமேஸ்வரி அந்த வீட்டுக்கு வருவார் .இந்த நிலையில் பரமேஸ்வரி தனது கணவருடன் நேற்று அவரது வீட்டுக்கு வந்தார் .அப்போது படுக்கை அறையில் பீரோவில் வைத்திருந்த 23 தங்க நகைகளை காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து பரமேஸ்வரி பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார் .சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.