கோவை மே 14 கோவை மாவட்டம் ஆனமலையை அடுத்த ஒடைய குளம்செம்மணாம்பதி மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாரிமுத்து ( வயது 42 இவரும் ஆனைமலை ரெட்டிமடை பிரிவு ஐயப்பன் (வயது 37)என்பவரும் மோட்டார் சைக்கிளில் ஒடைய குளம்’ செம்மணாம்பதி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை ஐயப்பன் ஓட்டினார் மாரிமுத்து பின்னால் இருந்தார் மாரப்பகவுண்டன் புதூர் பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர் . சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சைஅளித்தும் பலன் அளிக்காமல் மாரிமுத்து இறந்தார். ஐயப்பன் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டி வந்த பாலக்காடு நெம் மாராவை சேர்ந்த ராஜேஷ் (வயது 38) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதேபோல திருவண்ணாமலை, ராமலிங்க நகரை சேர்ந்தவர் மோகன் இவரது மகன் யோகேஷ் (வயது 24) இவரும் கேரள மாநிலம் நெல்லிப்பாறை,கோவிந்தாபுரத்தை சேர்ந்த மணிகண்டன் ( வயது 27) என்பவரும் ஒரே பைக்கில் பொள்ளாச்சி – மீன்கரை ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை யோகேஷ் ஓட்டினார். கணபதி பாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது திடீரென்று நிலை மாறி இருவரும் பைக்கில் இருந்துகீழே விழுந்தனர் .இதில்படுகாயம் அடைந்த யோகேஷ் அதே இடத்தில் இறந்தார். பின்னால் இருந்த மணிகண்டன் காயத்துடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆனை மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரே நாளில் சாலை விபத்தில் 2 பேர் பலி
