கோவை ஜூன் 10 கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதை யடுத்து நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கள் விற்பனை செய்து கொண்டிருந்ததாக சென்றாம் பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ( வயது 30) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 10 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல கணுவாய், மேற்குத் தோட்டத்தில் கள் விற்பனை செய்ததாக சந்திரசேகர் (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 5லிட்டர் கள் கைப்பற்றப்பட்டது.
தோட்டத்தில் கள் விற்பனை செய்த 2பேர் கைது .
