கோவை ஜூன் 9 கோவை மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று கோவை ரயில் நிலையத்தில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது 1-வது பிளாட்பாரத்தில் வந்தபோது அங்கு சாக்கு மூட்டை ஒன்று கேட்பாரற்றுகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பிரித்து பார்த்தபோது அதில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை ரெயில். கடத்தி வந்த யாரோ போலீசை பார்த்ததும் வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது .அந்த கஞ்சா சாக்லேட் கடத்தி வந்தது யார்? என்பது குறித்து அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கோவை ரயில் நிலையத்தில் 2கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது.
