அமேசான் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பெத் காலெட்டி, இது குறித்து வெளியிட்ட பதிவில், “நிறுவனத்தின் படிநிலைகளைக் குறைக்கவும், அதிகாரத்துவத்தைக் களைந்து உரிமையை அதிகரிக்கவும் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமேசான் ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 16,000 இடங்களுடன் சேர்த்து, 2023-ம் ஆண்டிற்குப் பிறகு அமேசான் மேற்கொள்ளும் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குப் புதிய வேலை தேடிக்கொள்ள 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும், அப்படி கிடைக்காதபட்சத்தில் அவர்களுக்குப் பணிநீக்கக் கால ஊதியம் மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எந்தெந்த நாடுகளில் இந்தப் பணிநீக்கம் அதிகம் இருக்கும் என்பது குறித்த தெளிவான விவரங்களை அமேசான் இன்னும் வெளியிடவில்லை. இந்தியாவில் உள்ள அமேசான் அலுவலகங்களும் இதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.









