கோவை ஜூன் 9கோவையைசேர்ந்தவர் 14 வயது சிறுமி. இந்த சிறுமியிடம் இன்ஸ்டாகிராம்மூலம் 22 வயது வாலிபர் ஒருவர் நெருங்கி பழகினார். பின்னர் இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். இந்த நிலையில் அந்த வாலிபர் ஆசை வார்த்தை காட்டி சிறுமியிடம் பாலியல் ரீதியான தொந்தரவுகளும் கொடுத்துள்ளார் .இது குறித்து சிறுமியின் தாய்க்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இந்த சம்பம்குறித்து கோவை தெற்கு பகுதி அனைத்துபெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 22 வயதுவாலி பரைநேற்று கைது செய்தனர் .இவரது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 14-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை. போக்சோவில் வாலிபர் கைது.
