கோவை ஜூன் 7சேலம் ஐந்து ரோடு சிக்னல் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் “சுசி ஈமு பார்ம் இந்தியா லிமிடெட்” என்ற நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் 1.50 லட்சம் முதலீடு செய்தால் ஈமு கோழி குஞ்சுகள் வழங்கி ,அதற்கு கொட்டகை அமைத்து தருவதாகவும், பராமரிப்பு செலவுக்கு மாதம் ரூ 7 ஆயிரம் மற்றும் போனஸ் இரண்டு ஆண்டுக்கு பிறகு டெபாசிட் தொகை முழுவதையும் திருப்பி தருவதாக விளம்பரப்படுத்தினர்.
இதை நம்பி நூற்றுக்கணக்கானோர் டெபாசிட் செய்தனர் ஆனால் முதிர்வு காலம் முடிந்தது பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றினர் .இந்த புகாரின் பேரில் சேலம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கையில் 385 முதலீட்டாளர்களிடம் 7.61 கோடி ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை , குன்னத்தூர் ரோட்டை சேர்ந்த அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குருசாமி ( வயது 45)பொது மேலாளர் கதிர்வேல், ஊழியர் சுரேஷ் ஆகியோர் மீது 2012 பிப்ரவரி 5-ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதானவர்கள் மீதுகோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் செயல்படும் தமிழ்நாடு முதலீட்டு நலன் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ( டான்பிட்) கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 13 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது .விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் குற்றம் சாட்டப்பட்ட குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.7. 89 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மற்ற இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தொகையினை பாதிக்கப்பட்ட டெபாசிட்டர்களுக்கு. பிரித்து கொடுக்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் முத்து விஜயன் ஆஜராகி வாதாடினார் .கோவை மற்றும் ஈரோட்டில் பதிவான 2 மோசடி வழக்குகளில் ஏற்கனவே குருசாமிக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ 7. 61கோடி மோசடி வழக்கில் ஈ.மு .கோழி நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை.
