கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள பூச்சியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 46 ) இவர் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். நேற்று சாய்பாபா காலனி பகுதியில் ஒரு குற்றவாளிக்கு நீதிமன்ற உத்தரவை (வாரண்ட்) கொடுக்க சென்றார். அப்போது அந்த ஆசாமி ஏட்டு ராஜேந்திரனையும், மற்றொரு போலீஸ்காரரையும் தகாத வார்த்தைகளால் பேசி ...
நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த மாதம் 19ஆம் தேதி 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவும், 89 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், 94 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 7ஆம் தேதியும், நான்காம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 13ஆம் ...
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வோரும், பிற நாடுகளில் இருந்து இந்தியா வருவோரும் ‘மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளில் மஞ்சல் காய்ச்சல் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்கா, தெற்கு அமெரிக்கா நாடுகளுக்குச் செல்வோரும், அங்கிருந்து இந்தியா வருவோரும் ...
கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சாய்பாபா காலனி மணியம் வேலப்பர் வீதியில் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக 2 பைக்கில் வந்த 3 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அவர்களிடம் 2 கிராம் போதை மருந்து, 100 கிராம் ...
கோவை ராம் நகர், சாஸ்திரி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலின் 3-வது மாடியில் பியூட்டி பார்லர் நடந்து வருகிறது. இங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது .இது ...
கோவை மே 14 பாண்டிச்சேரி பாகூரை சேர்ந்தவர் தசரதன். இவரது மகன் ஆகாஷ் (வயது 22) இவர் தனது உறவினர்களுடன் மேட்டுப்பாளையத்துக்கு சுற்றுலா வந்திருந்தார். அங்குள்ள வெள்ளிபாளையம் ரோட்டில் உள்ள கருப்பராயன் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர்.. பின்னர் அங்குள்ள பவானி ஆற்றில் உறவினர்களுடன் குளித்தார். அப்போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் ...
கோவை ரத்தினபுரி பெரியசாமி லே அவுட்டை சேர்ந்தவர் சரவணன் (வயது 50) கிரைண்டர் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கோவையை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் சரவணன் (வயது 43) என்பவரிடம் 8 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து ரூ.5 லட்சத்து 7 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார் .இதற்கு மாதம் ரூ ...
கோவை ஆர். எஸ். புரம். சின்ன எல்லை சந்து பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் சூரிய பிரகாஷ் ( வயது 31 )பி. எஸ். சி, பயோ டெக் படித்து பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை . இந்த நிலையில் நேற்று ஆர். எஸ். புரம். பூ ...
கோவை கவுண்டம்பாளையம், சீனிவாசா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 49) வக்கீல். இவர் தனியார் நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் உள்ளார் .இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார் . அப்போது வீட்டின் பக்கவாட்டில் உள்ள கதவு உடைக்கப்பட்டு ...
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜலாலுதீன் (வயது 20) இவர் கடந்த 6 ஆண்டுகளாக கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார் .இவர் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம் . இதனால் சிறுவன் அழுது கொண்டே வீட்டுக்கு சென்றான். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ...













