கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை முக்கோணத்தில் தமிழக அரசை கண்டித்தும் இந்து ஆலயங்களில் இருந்து அரசின் அறநிலையத்துறையை வெளியேற வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் பொருந்திய பதாகைகளை கையிலேந்தியவாறு இந்து முன்னணியின் கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் வால்பாறை ஏ.எஸ்.டி.சேகர் தலைமையில் கோவை மாவட்ட கோட்டச் செயலாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நேற்று ஆர்ப்பாட்டம் ...

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கம் உள்ள அரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி ( வயது 87 ) இவரது மனைவி மயிலாத்தாள் ( வயது 70) இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் திருமணம் ஆகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகிறார்கள். இதனால் அரசம்பாளையத்தில் கந்தசாமி,மயிலாத்தாள் ஆகியோர் மட்டும் வசித்து வந்தனர். ...

கோவை உக்கடத்திலிருந்து ஆத்துப் பாலம் வரை மேம்பாலம் ரூ 480 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து வாலாங்குளம் பகுதியில் இறங்குதளம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது .உக்கடம் முதல் ஆத்துப்பாலம் மற்றும் பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை மேம்பாலம் ஏறு தளம், இறங்குதளம் அமைக்கும் பணிகள் முழுமை அடைந்து விட்டது. இந்த ...

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள காடம்பாடி, ஏரோ நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 43 )இவர் கோவை நஞ்சுண்டாபுரம் தபால் அலுவலகத்தில் உதவி தபால் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி இவர் தபால் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ...

கோவை கணபதி மணியக்காரன் பாளையம், பாலமுருகன் நகரை சேர்ந்தவர் யோகதாஸ் ( வயது 39) இவர் பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள ஒரு ஆட்டோ சர்வீஸ் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார் . கடந்த 16ஆம் தேதி அந்த நிறுவனத்தின் மேற்கூறையில் ஏறி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது உயரமான பகுதியில் இருந்து ...

கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் நேற்று அதே காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வரும் மணிமாறன், முதன் நிலை போலீஸ்காரர் பூபாலன் ஆகியோருடன் தடாகம் ரோடு கோவில் மேடு -நால் ரோடு சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார் . அப்போது அந்த ...

கோவை சிங்கநல்லூர் கள்ளிமடை பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சிங்காநல்லூர் ராஜலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (45) தங்கவேல் ( 42 )சிட்கோ ...

திருவண்ணாமலையில் இருந்து கோவைக்கு தனியாருக்கு சொந்தமான டிராவல்ஸ் பஸ் 30 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 6 மணி அளவில் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனை முன் வந்தபோது இன்ஜினில் இருந்து புகை வந்தது . இதை பார்த்த டிரைவர் தாசன் பஸ்சை உடனே நிறுத்திவிட்டு பயணிகள் அனைவரையும் கீழே இறங்குமாறு கூறினார் . ...

கோவை சரவணம்பட்டி விளையாட்டு பூங்காவில் மின் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து கோவை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் மின் ஆய்வில் மின்சார நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்டு பார்க்குகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் மின்சார ஒயரிங் அமைப்புகள் குறித்து, சிறந்த உபகரணங்களைக் கொண்டு ஆய்வு செய்து மின் விபத்தில்லாதவாறு இயங்க சம்பந்தப்பட்ட ...

கோவை குனியமுத்தூர்,திருமறை நகரை சேர்ந்தவர் ரஷீத் இவரது மகள் சிப்ரின் (வயது 21) அங்குள்ள கல்லூரியில் எம். ஏ. ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அவருடன் படித்து வரும் நாகர்கோவில் வைத்தியர் விளையைச் சேர்ந்த ஸ்ரீ தர்ஷன் (வயது 22) என்பவரை காதலித்து வந்தாராம்..ஸ்ரீ தர்ஷனின் நடத்தை சரியில்லாததால் அவருடன் பேசுவதை ...