சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட ராட்வீலர் நாய்களை வளர்த்து வந்த உரிமையாளர், சிறுமியை அவை கடித்த போது கண்டு கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் புகார் கூறியுள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி ...
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசிய நிலையில் கோவை சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தான் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் மற்றும் டிரைவர் உள்ளிட்டவர்கள் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்குப் பதிவு செய்து உள்ளனர். பிரபல யூடியூபராக இருப்பவர் ...
கோவை ஆர் .எஸ் . புரம் கிழக்கு பாசியக் காரலு ரோட்டை சேர்ந்தவர் நாகேந்திரன் ( வயது 78 ) இவர் காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் நகை கடை நடத்தி வருகிறார். கடந்த 1-ந் தேதி காலையில் கடையை திறந்து வியாபாரம் செய்தார் . மாலையில் கடையை பூட்டினார். அதற்கு முன்னதாக நகைகளை சரிபார்த்த ...
கோவை இடையர் வீதியைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார், வியாபாரி , வட மாநிலத்தைச் சேர்ந்தவர்.இவரது மனைவி வீணா (வயது 43) இவர் நேற்று ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஜெயின் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த போது 60 வயது மதித்தக்க 2 ஆண்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்கள் ...
திருச்சி மாவட்டத்தில் குறிப்பாக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை, கள்ளச்சாராயம், கொலை, கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்கும், சரித்திர பதிவேடுகளில் இருக்கக்கூடிய முக்கிய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபட முயன்றால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளார் . அதேசமயம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் குற்றச்சம்பவங்கள் ...
கோவை : சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் ...
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வுகள் ,முடிந்து, கோடை விடுமுறையும் விடப்பட்டு உள்ளது. கடுமையான கோடை வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்களில் பலர் குழந்தைகளுடன் வெளியூர் சுற்றுலா மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ...
நீலகிரி மாவட்டம் அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மலர் கண்காட்சியினை வரவேற்கும் விதமாக இவ்வாண்டும் 126வது மலர் கண்காட்சி வரும் 10.05.2024 முதல் 20.05.2024 வரை (11 நாட்கள்) வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதனை கருத்திற்கொண்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல வண்ண மலர்த்தொட்டிகள் மலர்க்காட்சித் திடலில் அடுக்கி ...
சென்னை எம்ஜிஆர் நகர் குண்டலகேசி நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் மாநகர பேருந்தில் கண்டக்டர் ஆக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி வயது 40 உறவினர் வீட்டு திருமணத்தில் பந்தாவாக சென்று அசத்த வேண்டும் என்ற ஆசையில் 18 சவரன் தங்கச் சங்கிலியை ஆசை ஆசையாக அணிந்து கொண்டு சென்றாராம். திருமணம் முடிந்த கையோடு தான் ...
கோவை அருகே பஞ்ச கல்யாணி திருமணம்: மழை வேண்டி கழுதைகளுக்கு மேளதாளம், முழங்க உற்சாகமாக செய்து வைத்த கிராம மக்கள்…. கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கிராமம், லக்கேபாளையம். இக்கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் ...