சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 724 கிமீ தூரத்தை 9 மணி நேரத்திற்குள் கடக்கும் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார். இன்டர்சிட்டி ரயில் புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும். இறுதிப் பயணத்திற்கு, நாற்காலி கார் வகுப்பு டிக்கெட்டின் கட்டணம் ரூ.1,650 முதல் ரூ.1,700 வரை ...
காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போரை தொடங்கியதிலிருந்து, இப்போது வரை, சுமார் 90% காசா மக்கள் புலம் பெயர்ந்திருக்கின்றனர். இந்த இடப்பெயர்வு போலியோ அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே போலியோ தடுப்பு நடவடிக்கைக்காக மூன்று நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து ...
பெங்களூர்: பன்றி காய்ச்சல் பாதிப்பு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கர்நாடகா மற்றும், மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த பாதிப்பு கடந்த ஆண்டை விட அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும். அதேபோல இந்த பருவமழை காலத்தில் தற்போது பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருக்கிறது. பன்றிக்காய்ச்சல் H1N1 வைரஸ் ...
இந்திய ரிசா்வ் வங்கி பெயரைப் பயன்படுத்தி நிதி முறைகேடுகள் நடைபெறுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது. இணைய வழிப் பணப்பரிமாற்றம் அதிகரித்து வருவது பொதுமக்களின் நேரத்தை வெகுவாக மிச்சமாக்கி வரும் நிலையில், அது தொடா்பான மோசடிகளும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக மோசடிப் பேர்வழிகள் கைப்பேசி மூலம் தொடர்புகொண்டு வங்கி ...
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நோக்கியா, மைக்ரோசிப் உள்பட 8 நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.இவற்றின் மூலம் தமிழ்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி வசதிகளை இந்த நிறுவனங்கள் மேம்படுத்தும்.இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், ...
கோவை விமான நிலையத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருச்சியில் NIT கல்லூரி கல்லூரி வளாகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தல் குறித்த கேள்விக்கு, உலகில் எந்த மூலையிலும் இது போன்ற பாதகம் ஏற்பட்டாலும் அது கண்டிக்கத்தக்கது . அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். தமிழகத்திற்கு நியாயமாக தர ...
உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல் படி, 127 நாடுகளில் குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய, மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பரிசோதனை முகாமினை, சுகாதாரத்துறை அமைச்சர் ...
கோவை மாவட்டம் , அன்னூர் பக்கம் உள்ள ஒட்டர் பாளையத்தில் அருள்மிகு பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மைதானத்தில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக அன்னூர் போலீசுக்கு தகவல் வந்தது . சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது பணம் வைத்து சீட்டு ...
மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள சங்கர் நகரை சேர்ந்தவர் குமார் ( வயது 30) மேட்டுப்பாளையம் நகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார் .இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த குமார் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் விட்டத்தில் நைலான் கயிற்றை கட்டி தூக்கு ...
தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் நேற்றிரவு கோவை வந்தார். இன்று மாலை 3 மணிக்கு மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள கருத்தரங்கு கூடத்தில் சட்டம், ஒழுங்கு குறித்தும், விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மேற்கு ...













