மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
காசி விஸ்வநாதர் கோயிலில் பணியாற்றுவோருக்கு பிரதமர் மோடி;100 ஜோடி சணல் காலணிகள்..!

புதுடெல்லி: காசி விஸ்வநாதர் கோயிலில் பணியாற்றுவோருக்காக 100 ஜோடி சணல் காலணிகளை பிரதமர் நரேந்திர மோடி அனுப்பியுள்ளார்.
காசி விஸ்வநாதர் கோயிலில் வளாகத்தில் தோல் மற்றும் ரப்பர் காலணிகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், சேவைப் பணி செய்வோர், பாதுகாவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோர் வெறும் காலுடன் பணி செய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிந்தார். இதையடுத்து இவர்களுக்காக 100 ஜோடி சணல் காலணிகளை பிரதமர் கொள்முதல் செய்து, அவற்றை கோயிலுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் அவர்கள் கடமையாற்றும்போது இனி கடும் குளிரில் வெறும் காலுடன் இருக்க வேண்டியதில்லை.
இதுகுறித்து மத்திய அரசின் செய்திக்குறிப்பில், ‘காசி விஸ்வநாதர் கோயில் மீது பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளார். வாரணாசி தொடர்பான அனைத்துப் பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து கவனித்து வருகிறார். நுணுக்கமான பிரச்சினைகளிலும் அவர் கவனம் செலுத்துகிறார், ஏழைகள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என்பதற்கு இது மற்றொரு உதாரணம் ஆகும்’ என்று கூறப்பட்டுள்ளது.